1. |
வாரியத்தின் குறிக்கோள் |
திருநங்கைகளுக்கான சமூக மற்றும் பொருளாதார உதவிக்கான நலத் திட்டங்களை வகுத்து செயல்படுத்துதல். |
2. |
வாரியத்தின் அமைப்பு |
திருநங்கையர் நல வாரியம் – திருநங்கைகளின் நலனைக் காப்பதற்கும் அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் மாண்புமிகு சமூக நலத் துறை அமைச்சர் அவர்களின் தலைமையில் 11 அலுவல்சார் உறுப்பினர்களையும், 13 அலுவல்சாரா உறுப்பினர்களையும் (12 திருநங்கைகள் மற்றும் 1 பெண்) கொண்ட திருநங்கையர் நல வாரியம் அரசால் அமைக்கப்பட்டுள்ளது. |
|
|
திருநங்கைகளை கண்டறிய மாவட்ட அளவிலான குழு மாவட்ட ஆட்சித் தலைவர் - தலைவர்
- 3 அலுவல்சார் உறுப்பினர்கள்
- 1 திருநங்கை உறுப்பினர்
|
3. |
வழங்கப்படும் உதவிகள் |
• அடையாள அட்டைகள்
• உணவுப் பொருள் வழங்கும் அட்டைகள்
• வாக்காளர் அடையாள அட்டைகள்
• வீட்டுமனைப் பட்டாக்கள்
• மருத்துவ வசதிகள்
• இலவச வீட்டு வசதி
• கல்வி உதவித் தொகை
• திறன் வளர்க்கும் பயிற்சிகள்
• சுய உதவிக் குழுக்களுக்கு ஆதரவளித்தல்
• பொருளாதார செயல்பாட்டிற்கு ஆதரவளித்தல்
• குறுகிய கால தங்கும் இல்லங்கள்
|
4. |
தகுதிகள் |
• தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்
• தமிழ்நாடு திருநங்கையர் நல வாரியத்தினால் வழங்கப்படும் அடையாள அட்டை வைத்திருத்தல் வேண்டும்.
|
5. |
பெறும் உதவிகள் |
தேவையின் அடிப்படையில் அளிக்கப்படும் |
6. |
தொடர்பு கொள்ள வேண்டிய அலுவலர் |
மாவட்ட சமூக நல அலுவலர் |
7. |
குறைகள் இருப்பின் அணுக வேண்டிய அலுவலர் / குறை நிவர்த்தி அலுவலர் |
மாவட்ட அளவில்:
மாவட்ட ஆட்சித் தலைவர் /மாவட்ட சமூக நல அலுவலர்
மாநில அளவில்:
சமூக நல ஆணையர்,
லேடி வெலிங்டன் கல்லூரி வளாகம்,
காமராஜர் சாலை, சென்னை - 600 005.
தொலைபேசி எண். 044 – 24351891.
|